மீனாட்சி அம்மன் கோவிலில் "டச் ஸ்கிரீன்" வசதி
மதுரை:
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள அந்தக்கோவிலின் வளாகத்திற்குள்ளேயே "டச் ஸ்கிரீன்" எனப்படும் "தொடு உணர்வு கம்ப்யூட்டர்" வசதிஏற்படுத்தப்படவுள்ளது.
வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பக்தர்கள் இந்த "டச் ஸ்கிரீன்" வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த "டச் ஸ்கிரீன்" மூலம் மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு, அமைவிடம், அங்கு நடைபெறும் திருவிழாக்கள்,பூஜை விவரங்கள், பூஜைகளுக்கான கட்டண விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மதுரையில் உள்ள மற்ற முக்கியமான கோவில்களைப் பற்றிய தகவல்களும் இந்த "டச் ஸ்கிரீன்"கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தத் தகவல்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளமுடியும்.
தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரையிலும் இந்த "டச் ஸ்கிரீன்" வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த "டச் ஸ்கிரீன்" வசதியை பக்தர்கள் பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக அவர்கள் ரூ.1 மட்டுமேசெலுத்தினால் போதும் என்று மீனாட்சி அம்மன் கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications