வைகோவை சிறையில் சந்திக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு மதிமுக வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையிலிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அங்கு சென்று சந்திக்க வேண்டாம் என்றுதன்னுடைய தொண்டர்களை மதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
வைகோ சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் அவரை அங்கு சென்று மதிமுக பிரமுகர்களும்தொண்டர்களும் சந்தித்து வருகின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால்அனைவரையும் சிறை அதிகாரிகள் உள்ளே அனுமதிப்பதில்லை.
இதனால் ஏராளமான மதிமுக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து சிறைக்குச் சென்று வைகோவை சந்திப்பதைத் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று மதிமுகதலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட மதிமுகவின் செய்திக் குறிப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications