ராமேஸ்வரத்தில் கொண்டாட்டம்
ராமேஸ்வரம்:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் வெற்றி பெற்றதையடுத்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் மக்கள் பெரும்கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்டுகள் வெடிக்கப்பட்டு இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுக்காக காலையில் இருந்த காத்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மக்கள் அறிவிப்பு வெளியானவுடன் தெருக்களில் கூடிஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
பள்ளிளிலும் கடைகளிலும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் தேர்தல் முடிவு கரும்பலகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
சில ஆட்டோக்களில் கூட டிரைவர்கள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஜனாதிபதியாகிவிட்டதாக நினைக்கிறோம் என கலாம் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரான பால் போஸ்கூறினார்.
கலாமின் அண்ணன் மரைக்காயர் கூறுகையில், கலாம் ஜனாதிபதியாவதால் நாட்டுக்கு நல்லது நடந்தால் போதும். எங்களுக்கு எதுவும்வேண்டாம். இப்போது இருப்பது போலத் தான் நாங்கள் கலாம் ஜனாதிபதியானாலும் இருக்கப் போகிறோம் என்றார்.
சமீபத்தில் கலாம் சிறிது காலம் பேராசிரியாகப் பணியாற்றிய சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் இனிப்பு வழங்கிகொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications