போலி டீத்தூள் தயாரித்து விற்ற 7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல டீ நிறுவனங்களின் பெயரிலேயே போலி டீத்தூளைத் தயாரித்து விற்று வந்த 7 பேரை சென்னையில்போலீசார் கைது செய்தனர். ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ போலி டீத்தூளையும் போலீசார் கைப்பற்றினர்.

சென்னையில் த்ரீ ரோசஸ், ப்ரூக் பாண்ட், ஏ1 டஸ்ட் ஆகிய பிரபல டீ நிறுவனங்களின் பெயரில் போலி டீத்தூள்விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சென்னை-கொடுங்கையூர் பகுதியில் உள்ள "சன் டீத்தூள் தயாரிப்பு தொழிற்சாலை"யில்போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தான் அங்கு பிரபல டீ தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் கொண்ட பாக்கெட்டுகளில் போலி டீத்தூள்அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அந்தத் தொழிற்சாலையை நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரரான சுகிர்தராஜா என்பவர் உள்பட7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ போலி டீத்தூளையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்தத்தொழிற்சாலையைப் போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.

டீத்தூளுக்குப் பதிலாக மரத்தூளையும் மலிவு விலையில் வாங்கப்பட்ட டீத்தூளையும் தான் அவர்கள்பயன்படுத்தியது பின்னர் நடந்த சோதனையின் போது தெரிய வந்தது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்தத் தொழிற்சாலை போலி டீத்தூளை இது போன்று பிரபல நிறுவனங்களின்பெயர் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+