சென்னையில் சீட்டு கம்பெனி மோசடி: ரூ.1 கோடியுடன் தம்பதி தலைமறைவு
சென்னை:
சென்னையில் மற்றொரு சீட்டு கம்பெனி மக்களிடம் மோசடி செய்துள்ளது. இதை நடத்தி வந்த ஒரு தம்பதி ரூ.1கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் ஏராளமான நடுத்தர மக்கள் சீட்டுக் கம்பெனியில் முதலீடு செய்துஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
பல பிரபலமான சீட்டுக் கம்பெனிகள் கூட மக்களை ஏமாற்றி விட்டுக் கம்பியை நீட்டிய போதிலும், மக்கள்தொடர்ந்து இது போன்ற சீட்டுக் கம்பெனிகளில் பணத்தைப் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் சக்தி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்தது. கடந்தசுமார் 20 ஆண்டுகளாக இந்தச் சீட்டுக் கம்பெனியில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இவ்வளவு ஆண்டுகளாகத் தொடர்ந்து இருப்பதால் மக்களும் வெகு நம்பிக்கையுடன் இந்த சீட்டுக் கம்பெனியில்முதலீடு செய்வதற்குத் தயங்கவில்லை.
மாணிக்கம்-கஸ்தூரி என்ற தம்பதியர் தான் இந்த சீட்டுக் கம்பெனியை நடத்தி வந்தனர். இது வரை சுமார் 200 பேர்இந்தக் கம்பெனியில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சில சீட்டுக்களுக்கான முதிர்வுக் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டமக்கள் தங்கள் பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியோ இதோ, அதோ என்றுஇழுத்தடிக்க ஆரம்பித்தனர்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் சீட்டுப் போட்ட மக்களும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அடிக்கடிஅந்தத் தம்பதியரிடம் சென்று பணம் கேட்டு அலைந்து கொண்டு தான் இருந்தனர்.
இந்நிலையில் சக்தி என்டர்பிரைசஸ் திடீரென மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பணத்தைப் போட்ட மக்கள்மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியரின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
அங்கும் வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை மக்கள்உணர்ந்தனர். சில பேர் லட்சக் கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.
சுமார் ரூ.1 கோடி வரையிலான தொகையுடன் அந்தச் சீட்டுக் கம்பெனி தம்பதியர் தலைமறைவாகி விட்டனர்.
ஏமாந்த மக்கள் அனைவரும் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று நேரில் புகார்தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள அந்தத் தம்பதியரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.