For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல் நிலைய கற்பழிப்பு: போலீசாரை அடையாளம் காட்டிய பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாணியம்பாடி:

வாணியம்பாடி காவல் நிலையத்தில் 4 பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று போலீசாரின் அடையாள அணி வகுப்பு நடந்தது.அப்போது தங்களை கற்பழித்த 2 போலீஸ்காரர்களை அந்தப் பெண்கள் அடையாளம் காட்டினர்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு திருட்டு வழக்குத் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எலச்சனூரைச் சேர்ந்த விஜயா,மணிமேகலை, சத்யா உள்ளிட்ட 4 பெண்களை வாணியம்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், காவல் நிலையத்தில் வைத்து அவர்களை காவலர்கள் அடுத்தடுத்து கற்பழித்தனர். இதையடுத்து அந்தப் பெண்களின் உறவினர்கள்போராட்டத்தில் குதித்தனர். முதலில் இதை அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டம் வலுத்ததால் காவல் நிலையத்தின் எஸ்.ஐ. உள்பட சிலகாவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இது குறித்து கோட்டாட்சியாளரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. திருப்பத்தூர் நகர ஆர்.டி.ஓ. இது குறித்து விசாரணைநடத்தி வந்தார். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று போலீசாரின் அடையாள அணி வகுப்பு நடந்தது. அப்போது இந்த நான்குபெண்களும் தங்களைக் கற்பழித்த 2 போலீசாரை அடையாளம் காட்டினர். இவர்களில் ஒரு காவரின் பெயர் சுப்பிரமணியன் என்றுகூறப்படுகிறது.

இதையடுத்து இந்தக் கற்பழிப்பு உறுதியாகியுள்ளதாக இவர்களுக்காக போராட்டம் நடத்தும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X