தமிழில் ராணுவ செய்திகள்: நாடாளுமன்றத்தில் அதிமுக கோரிக்கை
டெல்லி:
இந்திய பாதுகாப்புத்துறை குறித்த செய்தி இதழ்களை தமிழ் உள்ளிட்ட பிற மொழிளிலும் வெளியிட வேண்டும் என அதிமுகஎம்.பி. ஜோதி நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் பிற செயல்பாடுகள் குறித்தஇதழ்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்.பியான ஜோதி, பாதுகாப்புத்துறைதொடர்பான பத்திரிக்கைகள், இதழ்களை தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியிட்டால் மக்களுக்கும் பாதுகாப்புத்துறைக்கும் இடையிலான உறவு வலுப்படும். அரசு இதைச் செய்யுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னண்டஸ், பாதுகாப்புத்துறையில் இருந்து எந்த இதழும்வெளியிடப்படுவதில்லை. ஆனால், எங்கள் துறையின் பல்வேறு பிரிவுகள் இவற்றை வெளியிடுகின்றன. இவற்றை பிற இந்தியமொழிகளிலும் வெளியிடுவது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்.
ஆனால், பெர்னாண்டசிடம் கேள்வி கேட்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மறுத்துவிட்டனர். கேள்வி நேரத்தின்போதுபாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளைக் கேட்குமாறு ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களையும் காங்கிரஸ்உறுப்பினர்களையும் பார்த்து சபாநாயகர் கிருஷ்ணகாந்த் கூறினார்.
ஆனால், தெகல்கா நிறுவனம் வெளியிட்ட கேசட்டின்படி பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறையில் ஊழல் செய்திருப்பதுஉறுதியாகிறது. அவரை பாதுகாப்பு அமைச்சராக நாங்கள் ஏற்க மாட்டோம். அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம் எனஅக் கட்சி எம்.பிக்கள் பதில் கூறிவிட்டு தாங்கள் ஏற்கனவே கொடுத்த கேள்விகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து பா.ஜ.க. எம்பிக்களுக்கும் எதிர்க் கட்சி எம்பிக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்புத்துறை ஊழல் விவகாரம் வெடித்தபோது எதிர்க் கட்சியினர் செய்த ரகளையால் பெர்னாண்டஸ் பதவி விலகினார்.பின்னர் அவரை பிரதமர் வாஜ்பாய் மீண்டும் அமைச்சராக்கினார். அன்று முதல் பெர்னாண்டசை எதிர்க் கட்சிகள் தொடர்ந்துபுறக்கணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.