"லாவணி கச்சேரி" நடத்தக் கூடாது: ஜெயலலிதாவுக்கு இளங்கோவன் சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு விழாக்கள் என்ற பெயரில் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று, கோடிக்கணக்கான செலவில் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் நடத்துவதைஜெயலலிதா நிறுத்தினாலே தமிழகத்தில் ஓரளவுக்கு வறுமையை ஒழித்துவிடலாம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா வருகிறார் என்றவுடன் ஆயிரக்கணக்கான வரவேற்பு வளைவுகள், ஆடம்பர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்கிறது.மதுரை, சேலத்திற்கு அவர் சென்றதையொட்டி ரூ. 50 லட்சம் செலவில் அரசு விருந்தினர் இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டன.

ஆனால், இந்த விருந்தினர் இல்லங்களில் தங்காமல் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல்களில் அரசு செலவில் ஜெயலலிதா தங்கினார்.

அதே போல அரசு விழாக்களையும் மிக ஆடம்பரமாக நடத்துகிறார்கள். இதற்காக கோடிக்கணக்கான அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.இதை ஜெயலிலதா நிறுத்தினால் தமிழகத்தின் வறுமையே ஓரளவு குறைந்துவிடும்.

இதைச் சுட்டிக் காட்டினால் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். அதைவிட்டுவிட்டு தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு பதில் தந்துலாவணிக் கச்சேரி நடத்தக் கூடாது என்று இளங்கோவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+