பாரம்பரிய உடையில் கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜனாதிபதிகள் அணியும் பாரம்பரிய உடையான பந்த்காலா ரக உடையை பல தரப்பு நிர்பந்தம் காரணமாக டாக்டர் அப்துல் கலாம்அணிந்தார்.

முதலில் கோர்ட், டை, சூட்டிலேயே பதவியேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ஜனாதிபதிக்கான உடையை அணியவேண்டும் என அவருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரக உடையை அணிய கலாம் ஒப்புக் கொண்டார். உடனே அவருக்குப் பிடித்தமான பல வண்ணங்களில் அந்த உடைகள்தைக்கப்பட்டன.

தனது டிரேட் மார்க்கான டார்க் புளூ கலர் உடையை அணிந்து இன்று காலை 9 மணிக்கு தனது ஆசியாட் வில்லேஜ் வீட்டிலிருந்து(டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லம்) கிளம்பினார். வழக்கமாக அவர் பயன்படுத்தும் புல்லட் புரூப் அம்பாசிடர் காருக்குப் பதிலாக அவரைஅழைத்துச் செல்ல ஜனாதிபதி மாளிகைக்குச் சொந்தமான கருப்பு மெர்சிடீஸ் பென்ஸ் கார் வந்தது.

அவரது அண்டை வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வந்து நின்று கலாமை நோக்கி கையசைத்தனர். அவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்கையசைத்து வணக்கம் சொன்ன கலாம் அங்கிருந்து கிளம்பினார். கடந்த 3 வருடங்களாக இந்த வீட்டில் தங்கியிருந்த கலாம் அக்கம்பக்கத்துமக்களுடன் மிக நெருங்கிப் பழகினார்.

இன்று அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு ஜனாதிபதி மாளிகையில் குடியேறுவது தங்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும் இன்னொருபுறம் பெரும் இழப்பை அனுபவிப்பது போல உள்ளதாக அவரது பக்கத்து வீட்டுக்காரரான பன்சால் மற்றும் அவரது மனைவி அனிதாஆகியோர் நிருபர்களிடம் கூறினர்.

தினமும் காலையில் வாக் செல்லும்போது எதிரில் வருபவர்களுக்கு ஹலோ சொல்ல கலாம் தவறுவதில்லை. எங்களக்கு முதல் குட் மார்னிக்கலாமிடம் இருந்து தான் கிடைத்து வந்தது. ஒரு நல்ல மனிதரின் அன்னோன்யத்தை இழந்துவிட்டோம் என்றார் பன்சால்.

பதவியேற்கச் செல்லும்போது காலையில் அவர் என்ன சாப்பிட்டார் என அவரது வேலையாளிடம் கேட்டபோது, ஒரு ரொட்டி, கீரை, தயிர்,ஊறுகாய், ஒரு துண்டு பப்பாளிப் பழம், 2 துண்டு மாம்பழம். வழக்கமாகவே அவர் உணவில் கவனம் செலுத்தவே மாட்டார் என்றார்.

தீவிரவாதிகளின் ஹிட்-லிஸ்ட் மற்றும் பாகிஸ்தானின் வயிற்றெரிச்சலில் முதலிடத்தில் இருப்பவர் கலாம். இதனால், அவருக்கு இந்த வீட்டில்மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. புல்லட் புரூப் காரைத் தான் அவர் பயன்படுத்தி வந்தார். ஜனாதிபதி பதவிக்கு அவரது பெயர்அறிவிக்கப்பட்டவுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு மாதமாக அவரது வீட்டைச் சுற்றி 400 பாதுகாப்புப் படையினர் எந்த நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டிந்தனர். டெல்லி போலீஸ்,பஞ்சாப் போலீஸ், ராஜஸ்தான் ரிசர்வ் போலீஸ், மத்திய ரிசர்வ் பேலீஸ் படையினர் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்தப் பாதுகாப்பினால் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாது என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாராம் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+