For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொண்டாட்ட த்தில் ராமேஸ்வரம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியானதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.அதே போல ராமேஸ்வரம் மசூதிகளில் சிறப்புத் தொழுகையும் நடந்தது.

அவர் படித்த பள்ளியின் மைதானத்தில் டிவி வைக்கப்பட்டது. இன்று காலை எல்லா மாணவர்களும் மைதானத்தில் கூடி கலாம்பதவியேற்பதை டிவியில் கண்டு களித்தனர்.

பின்னர் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கினர். ராமேஸ்வரத்தில் பல கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு சாக்லெட்கள்வழங்கப்பட்டன. ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அவர் பதவியேற்றவுடன் ராமேஸ்வரத்தின் பல இடங்களிலும் வேட்டுகள் முழங்கின. சென்னையில் ஐ.ஐ.டியிலும் இதே போல வேட்டுகள்வெடித்து மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராமநாதசுவாமி கோவில் சார்பில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. பக்தர்களும் சிறப்பு அர்ச்சணைகள் நடத்தக் கோரி கோவிலில் குவிந்தனர்.முஸ்லீம்களும் கோவிலுக்கு வந்து கலாமுக்காக நடந்த பூஜைகளில் பங்கேற்றனர்.

அவர் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் இந்த நிகழ்ச்சியையொட்டி சில நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். ஆனால், பெரியார் கல்லூரியில் நடந்த ராகிங் மற்றும் மாணவர் கொலை விவகாரத்தால் அனைத்துக் கல்லூரிகளும்மூடப்பட்டுவிட்டன. இதனால் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X