சவால்களை வெல்வோம்: கலாம் பேச்சு
டெல்லி:
தேசத்தின் பாதுகாப்பையும், மதசார்பின்மையையும் நாம் கட்டிக் காக்க வேண்டும் என ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற டாக்டர் அப்துல்கலாம் கூறினார்.
கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்ட அவர் ஆற்றிய உரை விவரம்:
நாட்டின் இன்றைய சவால்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் வேலைவாய்ப்பின்மையும் சில உள்நாட்டு பிரச்சனைகளும் தான்.எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்துக்குத் தேவையானதளவாடங்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அண்டை நாட்டை நம்பியிருக்கும் நிலை நீடிக்கக் கூடாது.
நாட்டின் பாதுகாப்பு என்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு குடிமகனின் கடமை. தேசத்துக்கு தீங்கு நேர எந்த ஒரு இந்தியனும்அனுமதிக்கக் கூடாது. தேசம் தான் நமக்கு எல்லாம்.
நாட்டை மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றாக வேண்டும். வறுமையயும் வேலைவாய்ப்பின்மையயும் போக்க அதுஒன்று தான் வழி. சமூக, ராணுவ, பொருளாதாரரீதியில் நாட்டை வலுப்படுத்தியாக வேண்டும்.
இதை அரசு மட்டும் செய்துவிட முடியுமா? முடியாது. இதை ஒரு இயக்கமாக நடத்தி வென்று காட்ட வேண்டிய பொறுப்பு நாம்எல்லோருக்கும் உண்டு. வெறும் பேச்சுக்கள் உதவாது. செயலில் இறங்கத் தயாராகுங்கள். அதை எப்போது செய்வது. நாளைக்கா? இல்லை,இன்றே, இப்போதே. பொற்காலத்துக்கு இந்த தேசத்தைக் கொண்டு செல்வோம் என்றார் கலாம்.
10 நிமிடங்களே அவர் உரையாற்றினார். அவரது உரையை கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும்பார்வையாளர்களும் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications