குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சி இல்லை: பா.ஜ.க. உறுதி
சென்னை:
குஜராத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின்கோரிக்கையை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன்னுடைய அமைச்சரவையைக் கலைத்து விட்டு தன்னுடைய பதவியையும்ராஜினாமா செய்து விட்டார். மேலும் அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் பா.ஜ.கவுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால்உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை அக்கட்சி நெருக்கி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குஜராத்தில்ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிஎதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில்,
குஜராத் அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன் அம்மாநில மோடியும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.மேலும் அங்கு வன்முறை முழுவதுமாக ஓய்ந்து முழு அமைதி திரும்பி விட்டது.
எனவே குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து தான் தீர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க் கட்சிகள்இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரசம்மதிக்கட்டுமே?
அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன் அங்கு ஜனாதிபதிஆட்சியைக் கொண்டு வர அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சம்மதிக்குமா?
மேலும் குஜராத்தில் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் எப்போதுமே தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன் குஜராத்தில் வன்முறை தாண்டவமாடிக் கொண்டிருந்த போது மோடி ராஜினாமா செய்துஅங்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இப்போதோதேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
அதனால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோருவதில் எந்தவிதமான நியாயமும்இல்லை.
மோடி அமைச்சரவையின் ராஜினாமாவை குஜராத் ஆளுநரே ஏற்றுக் கொண்டுள்ள சூழ்நிலையில் தற்போதுஉடனடியாக அங்கு தேர்தல் நடத்துவதைத் தவிர தேர்தல் கமிஷனுக்கும் வேறு வழி இல்லை என்றார் வெங்கையாநாயுடு.
-
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி!











Click it and Unblock the Notifications