கார்கில் வெற்றி தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
டெல்லி:
கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தினரையும், ஆப்கான் கூலிப் படையினரையும் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிர் தந்துவிரட்டியடித்த கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் உணர்ச்சிமயமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1999ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியை தீவிரவாதிகள் மூலம் கைப்பற்றியது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானின்தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தப்பகுதியில் ஊடுருவினர்.
இவர்களை விரட்டியடிக்க இந்திய ராணவம் பெரும் தாக்குதல் நடத்தியது. பல வாரங்கள் தொடர்ந்த இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானஇந்திய வீரர்கள் பலியாயினர்.
இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று இரவு மெழுகுவர்த்திகள் ஏந்தியஊர்வலங்கள் நடந்தன.
இன்று காலை சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் தென் பிராந்திய ராணுவத் தலைவர் ஜாம்பால் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்பாலின் மனைவி அர்ச்சனா கார்கில் போரில் உயிரிழந்த 38 வீரர்களின் மனைவிகளுக்கு அரசின் நிதியுதவியை வழங்கினார்.
கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் என்.சி.சி. மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்திகளை ஏற்றி உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
பாண்டிச்சேரியில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், பிராந்தியராணுவ அதிகாரிகள், போலீசார் ஆகியோர் மறைந்த 4 பாண்டிச்சேரி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தென் மண்டல கடற்படைத் தலைமையகமான கொச்சி கடற்படைத் தளத்திலும் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ராணுவ, கடற்படை, விமானப் படை பயிற்சி மையங்கள், தளங்கள், அலுவலகங்களில் இந்த அஞ்சலிநிகழ்ச்சி நடந்தது.