லண்டனில் பாலசிங்கம் - இலங்கை அமைச்சர் சந்திப்பு
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கவுள்ள சூழ்நிலையில் லண்டனில் உள்ளவிடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தை இலங்கை பொருளாதார சீரமைப்புஅமைச்சரான மிலின்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்துக்கான நார்வே தூதரின் வீட்டில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களைத் தயாரிப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆலோசனைநடத்தப்பட்டது.
ஆனாலும் பேச்சுவார்த்தை நடக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தச் சந்திப்பின் போதும்அது குறித்து பேசப்படவில்லை என்று தெரிகிறது.
நார்வேயின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான விதார் ஹெல்கெசனும் இந்தச் சந்திப்பின் போதுஉடனிருந்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர் பாலசிங்கத்தை தற்போது தான்முதல் முறையாகச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications