நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் திடீர் "ஸ்டிரைக்"

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

பழுதடைந்துள்ள வாகனங்களை உடனடியாகச் சீரமைக்கக் கோரி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 1,500ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஊழியர்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் பல பஸ்கள் மற்றும் வேன்கள்மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளன.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பழுதடைந்துள்ள அந்த வாகனங்களால் விபத்து ஏற்படலாம் என்று அதில்செல்லும் ஊழியர்கள் தினமும் பயந்து பயந்தே அவற்றில் ஏறி வேலைக்கு வருகின்றனர்.

இதையடுத்து பழுதடைந்துள்ள வாகனங்களை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 1,500ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டிய முதல் ஷிப்டு ஊழியர்கள் இன்று வேலைக்குவருவதைப் புறக்கணித்தனர்.

இதனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று காலை நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாகப்பாதிக்கப்பட்டது.

இதனால் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியும் தடை படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+