அமெரிக்காவில் வேத நகரம்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வேத நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
லோவாவில் உள்ள பேர்பீல்ட் நகரில் இந்த நகரத்தை மகரிஷி மகேஷ் யோகியின் பக்தர்கள் அமைத்துள்ளனர்.
இந்திய வழிபாட்டு முறைகள் மூலம் இன்றைய சிக்கல் நிறைந்த உலக வாழ்வில் அமைதியைத் தேடுவது குறித்து போதித்து வருபவர் மகரிஷிமகேஷ் யோகி. இவருக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர்.
அதிகாலை சூரியக் கதிர்களின் சக்தியைப் பெரும் வகையில் வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது இந்த வேதநகரத்தின் முக்கிய கட்டடம். இந்த நகரின் இரண்டு மைல் தொலைவில் மகரிஷி மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு 2பெரிய தியான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நகரில் அமெரிக்க டாலர் தவிர ராம் கரன்சி என்ற பணமும் புழக்கத்தில் உள்ளது.
இப்போது இந்த நகரில் 200 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க டாக்டர்கள், பொருளாதார நிபுணர்கள்,பேராசிரியர்கள்.
மகரிஷி மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இதற்கான விழாவும் நடைபெறவுள்ளது. இதில்உலகம் முழுவதும் இருந்தும் 800 யோகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.