ராணுவ ஆராய்ச்சி மையத்தை விட்டு வெளியேறும் விஞ்ஞானிகள்
டெல்லி:
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓவில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 331 விஞ்ஞானிகள் ராஜினாமாசெய்துள்ளனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இத் தகவலை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
பல டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் சாப்ட்வேர் உள்ளிட்ட தொழில்களுக்குப் போய்விட்டனர். ஊதியம் அதிக அளவில் இருப்பதால் ராணுவஆராய்ச்சிப் பணிகளை விட்டுவிட்டு சாப்ட்வேர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் போக்கு விஞ்ஞானிகளிடையேஅதிகரித்து வருவதாகவும் பெர்னாண்டஸ் கூறினார்.
ஆனால், 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு அமலாக்கியதால் விஞ்ஞானிகளின் ஊதியம் அதிகரித்துள்ளது. இதனால்வெளிநாட்டு வேலைகளைத் தேடும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் அதிக ஊதியம்வழங்குவது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருவதாக பெர்னாண்டஸ் கூறினார்.
இதே போல ராணுவத்திலும் அதிகாரிகள் மட்டத்தில் 12,554 பதவிகள் காலியாக இருப்பதாகவும் உரிய நபர்கள் கிடைக்காததால் இவைகாலியாக உள்ளதாகவும் கூறினார். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள போர் பயிற்சிகள் குறித்த ஆராய்ச்சியில் புனேபல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ராணுவம் நிதியுதவு செய்து வருகிறது என்றார் பெர்னாண்டஸ்.
பிரிட்டன் போர் விமானங்கள்:
இந் நிலையில் சேனல் 4 என்ற பிரிட்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பெர்னாண்டஸ், இந்திய விமானப் படைக்கு ஹாக் ரகபோர் விமானங்களை இங்கிலாந்திடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்போது விலை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக போர் பயிற்சி விமானத்தை விமானப் படை கேட்டு வருகிறது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இதைகண்டுகொள்ளாமல் இருந்து வந்தன.
பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சரான பின்னர் தான் இந்தக் கோரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
உரிய போர் பயிற்சி விமானம் இல்லாததால் அதிவேக மிக் விமானங்களில் இந்திய விமானிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனால்நூற்றுக்கணக்கான மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி நாட்டுக்கு பெரும் பொருள் நஷ்டமும் மிகச் சிறந்த விமானிகளை இழக்கவேண்டிய துயரமும் ஏற்பட்டுள்ளது.
இப்போது 66 ஹாக் ரக போர் விமானங்களை ரூ. 4,200 கோடி செலவில் இந்தியா வாங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications