பொடாவை வாபஸ் பெற மத்திய அரசுக்கு கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழர் தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்களின் பேச்சுரிமையைக் கூட இந்தச் சட்டம் ஏற்க மறுப்பதால் மத்திய அரசு இந்தச் சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழர் தேசிய இயக்கம் இன்று கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம் கூறியது.
இது தொடர்பாக சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவ்வியக்கம் முடிவு செய்துள்ளது. இதைத் தவிர ஆகஸ்டு 9ம் தேதி பேரணி நடத்தவும் தமிழர் தேசிய இயக்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெடுமாறன் கைதை எதிர்த்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவ்வியக்கம் இன்று அறிவித்தது.












Click it and Unblock the Notifications