கடும் வறட்சி: சட்டசபையை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அக்கூட்டத்தில் மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழகம் இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்து வருகிறது. இதுவரை ஒரு மாவட்டம் கூட வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை.
இதுவரை ஒதுக்கப்பட்ட வறட்சி நிவாரண உதவித் தொகையும் "யானைப் பசிக்கு சோளப் பொறி" போலத் தான் மிகவும் குறைவாக உள்ளது.
எனவே வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அனைவருக்கும் உடனடியாக இரண்டு கிலோ அரிசியை இலவசமாக அரசு வழங்க வேண்டும்.
வறட்சி பற்றி விவாதிப்பதற்காக தமிழக அரசு உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொடா சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications