"தமிழகத்தை 2 ஆக்க வேண்டாம், 4 ஆக்குங்கள்": இது கொங்கு கட்சியின் கோரிக்கை"

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அதை 4 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு அருகே வெள்ளோடு என்ற இடத்தில் நடந்த 197வது தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவின்போது தான் இந்த கோரிக்கை விடப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜு பேசுகையில்,

தற்போதைய தமிழகம் மிகப் பெரிதாக உள்ளது. எனவே மாநிலத்தைப் பிரித்தால் அது நிர்வாகத்திற்குத் தான் நல்லது

.தமிழகத்தை தொண்டைநாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என நான்காகப் பிரிக்க வேண்டும். அது தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார் ராஜு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+