சென்னை-மதுரை இடையே விரைவில் இன்னொரு அகல ரயில் பாதை
மதுரை:
சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலான ரயில் பாதை விரைவில் இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படும் என்று ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை-விழுப்புரம் இடையே இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதலாக ஒரு மின்சார ரயில் விடப்படும்.
மேலும் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே உள்ள ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கோரிக்கை வெகு விரைவில் நிறைவேறவுள்ளது. சென்னை-மதுரை இடையே விரைவில் "டபுள் டிராக்" என்று அழைக்கப்படும் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
இந்த டபுள் டிராக் அமைப்பதன் மூலம் பயண நேரம் மேலும் வெகுவாகக் குறைக்கப்படும்.
சென்னை-கோயம்புத்தூர் இடையே செல்லும் ரயில் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திலும் இரண்டு நிமிடங்கள் வரை நின்று செல்லும் என்றார் மூர்த்தி.