மக்களை ஏமாற்றிய செளடாம்பிகா நிதி நிறுவன கட்டடம் சீல்
சேலம்:
சேலத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் நிதி வசூல் செய்துவிட்டு கம்பி நீட்டிய செளடாம்பிகா நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் விளம்பரங்களுடன் செயல்பட்டு வந்தது இந்த செளடாம்பிகா நிதி நிறுவனம். ஏகப்பட்ட வட்டி, பரிசுகளைக் காட்டி மக்களை ஏமாற்றியது.
இவர்களிடம் ஏமாந்த சுமார் 2,500 பேர் இதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், சில மாதங்களுக்கு முன் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டி தர மறுத்தது. தொடர்ந்து பலருக்கு முதலீட்டுப் பணத்தையும் தர மறுத்தது.
இதையடுத்து பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த நிறுவனத்தின தலைவரான மனோகரன், இவரது மனைவி ஜெய ஸ்ரீ ஆகியோரை கைது செய்தனர்.
இந் நிலையில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்தக் கட்டடத்தின் மதிப்பு மட்டும் ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கோட்ட ஆட்சியர் மணி முன்னிலையில் இந்தக் கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications