இன்று நீதிமன்றம் வருகிறார் வைகோ
வேலூர்:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்நீதிமன்றக் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் இன்று வேலூர் சிறையிலிருந்து சென்னையில் உள்ள பொடாதனி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்.
கடந்த ஜூன் 29ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் புலிகளைஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகோ, ஜூலை 11ம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் வைகோவை 28 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிவெங்கடாஜலபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பொடா சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை-பூந்தமல்லியில் தனிநீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. நீதிபதி எல். ராஜேந்திரன் பொடா தொடர்பான வழக்குகளை விசாரித்துவருகிறார்.
இந்நிலையில் வைகோவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
இதையடுத்து வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் வைகோ, பூந்தமல்லியில் உள்ளபொடா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த நீதிமன்றத்தில் இன்று தான் வைகோ முதல் முறையாகஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவின் காவலை நீட்டிக்கச் சொல்லி க்யூ பிராஞ்ச் போலீசார் பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள்என்று தெரிகிறது.
வைகோ தவிர பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மற்ற 8 மதிமுகவினரும் இன்று தனி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இதையொட்டி பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications