கொலை வழக்கு: கோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி "ஆப்சென்ட்"
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி கோர்ட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து அடுத்த மாதம் 3ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications