சென்னை போலீசாரிடம் ஜெ. குறை கேட்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகரப் போலீசாரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை கேட்கும் நிகழ்ச்சி இன்றைக்குப் பதில் வரும்14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது.கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கட்டமாக தென் மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,700 போலீசாரிடம் ஜெயலலிதாகுறைகேட்டார்.

பின்னர் கடந்த ஆகஸ்டு 2ம் தேதி மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,700 போலீசாரிடமும் ஆகஸ்டு 5ம் தேதிமத்திய மண்டலத்தின் 1,200 போலீசாரிடமும் குறைகளைக் கேட்டு மனுக்களையும்பெற்றுக் கொண்டார்ஜெயலலிதா.

இந்நிலையில் சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும்தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் இன்று ஜெயலலிதா குறை கேட்பதாக இருந்தது.

ஆனால் இதற்காக 3,000க்கும் மேற்பட்ட போலீசார் விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு பேரிடமும் ஒரே நாளில்குறை கேட்பது முடியாத காரியம் என்பதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீசாரிடம் மட்டும் ஜெயலலிதா இன்று குறைகளைக் கேட்பார்.அவர்களிடமிருந்து மனுக்களையும் அவர் இன்று பெற்றுக் கொள்வார்.

சென்னை மாநகரப் போலீசாரிடம் அவர் குறை கேட்கும் நிகழ்ச்சி வரும் 14ம் தேதிக்கு (அடுத்த புதன்கிழமை)ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சுமார் 2,000 போலீசார் இந்தக் குறை கேட்கும் நிகழ்ச்சிக்குவிண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+