பொடாவை எதிர்த்து நீதிபதி முன் கைதிகள் கோஷம்: தூத்துக்குடியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி முதன்மை கூடுதல் அமர்வு நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச்சேர்ந்த கைதிகள் திடீரென்று பொடா சட்டத்தைக் கண்டித்து நீதிபதி முன் கோஷமிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக பொன்னிவளவன் உள்ளிட்டதமிழ்நாடு விடுதலைப் படையினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தூத்துக்குடி போலீஸார் முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி முன்பாகவே அந்தக் கைதிகள் பொடா சட்டத்திற்கு எதிராக திடீரென்று கோஷமிட்டனர்.இதையடுத்து நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு அந்தக் கைதிகள் மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications