வைகோ நீதிமன்றத்தில் பேசட்டும்: ஜெ.
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து பொடா நீதிமன்றத்தில் நாங்கள்விளக்கமளிப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் ஜெயலலிதாநிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ மற்றும் மதிமுக பிரமுகர்களின்வீடுகளில் இன்று க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்திய சோதனைகள் குறித்து அப்போது ஒரு நிருபர் ஜெயலலிதாவிடம்கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, இது குறித்து நாங்கள் பொடா தனி நீதிமன்றத்தில் விளக்கமளிப்போம் என்றுகூறினார்.
பொடா சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தது ஜெயலலிதாவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்றுநேற்று வைகோ கூறியுள்ளாரே என்று மற்றொரு நிருபர் கேட்டதற்கு, அதை அவரே நேரடியாக நீதிமன்றத்தில்கூறிக் கொள்ளட்டும் என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
டெல்லி செல்ல வைகோ கோரிக்கை:
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தன்னை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 12ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாஎம்.பிக்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும்.
தற்போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசிஎம்.பியான வைகோவும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
இதற்காக வைகோவை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் அவர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏற்கனவே தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 15ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வேலூர் சிறையிலிருந்துசென்னை வந்துவாக்களித்த வைகோ பின்னர் மீண்டும் சிறைக்குச் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications