Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சதுரகிரி மலை ஆடி அமாவாசை விழா நெரிசலில் சிக்கி 3 முதிய பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி திரண்டு வந்திருந்த பக்தர்களின்கூட்ட நெரிசலில் சிக்கி வயதான 3 பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

காமராஜர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்ஆடி அமாவாசையின் போது விழா நடக்கும்.

இதன் சுற்றுப் புறத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அப்போது சதுரகிரியின்மலையில் ஏறி மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நேற்று ஆடி அமாவாசை விழா இங்கு கோலாகலமாகத் தொடங்கியது. சுமார் நான்கு லட்சம்பக்தர்கள் திரண்டு வந்து கோவிலில் வழிபட்டனர். இந்தக் கோவிலில் 18 வகையான சிறப்பு பூஜைகள் நேற்றுகாலை முதல் நடந்தன.

மலை ஏறும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த பலராமன் (55), மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளஎஸ். மேலப்பட்டியைச் சேர்ந்த ராசு (55) மற்றும் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர்ஆகியோர் தான் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இதையொட்டி புனித நீராடினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+