For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் மீதான தடையை நீக்க சந்திரிகா சம்மதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சம்மதம்தெரிவித்துள்ளார் என்று இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிரோன் பெர்னாண்டோஇன்று கூறினார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாண்டோ இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கான தேதியை புலிகள்ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்தத் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும்.

புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு சந்திரிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் நிலைமை சரியானதும் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் அகதிகளும் மீண்டும் எங்கள் நாட்டுக்கே,அதாவது தங்கள் வீட்டுக்கே திரும்பலாம்.

அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசுமேற்கொள்ளும் என்று பெர்னாண்டோ கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X