Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலுக்காக சொத்துக்களை விற்றவன் வைகோ: தாயார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கலிங்கப்பட்டி:

வைகோ சிறையில் இருப்பது குறித்துக் கூட எனக்குக் கவலையில்லை. ஆனால் எங்களது வீட்டில் போலீஸார்சோதனை போட்டது தான் வேதனையாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார்மாரியம்மாள் கூறினார்.

வைகோவின் கலிங்கப்பட்டி, சென்னை வீடுகள், கட்சி தலைமை அலுவலகமான "தாயகம்", மதிமுகவினரின்வீடுகள் மற்றும் கிளை அலுவலகங்களில் நேற்று (வியாழக்கிழமை) க்யூ பிராஞ்ச் போலீஸார் சோதனை நடத்தினர்.

கலிங்கப்படியில் இந்த சோதனை முடிந்த பின்னர் வைகோவின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த சோதனை தான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. மற்றபடி வைகோ சிறையில் இருப்பது கூட எனக்குப்பெரிதாகப் படவில்லை.

அவன் எங்கிருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பான். அதனால் தான் நான் இன்னும் சிறைக்கு சென்று கூடஅவனைப் பார்க்கவில்லை. அங்கு போனாலும் எனக்கு தைரியம் தான் கூறுவான். எதையும் தாங்கும் இதயம்படைத்தவன் எனது மகன்.

அரசியலுக்காக என் கணவர் சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் விற்று விட்டவன் வைகோ. அது குறித்துக்கூட கவலையில்லை. ஆனால் போலீஸார் இப்படி சோதனை செய்தது தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறதுஎன்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+