கோவையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தின் 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் அருகே உள்ளது சேரையாம்பாளையம் என்ற கிராமம். இங்கு தங்கவேலு-குப்பாத்தாள் என்றதம்பதியும் தங்கவேலுவின் தம்பி சுப்பண்ணாவும் வசித்து வந்தனர்.
அவர்கள் கோழிப்பண்ணை ஒன்றை வீட்டுக்கு அருகிலேயே வைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.
நேற்று இரவு வீட்டிற்குள் உட்கார்ந்து சுப்பண்ணா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் வீட்டுக்குள்நுழைந்து அவரைப் பயங்கரமாகத் தாக்கி அவருடைய கழுத்தை அரிவாளால் அறுத்துப் போட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் "ஓ"வென்று கத்தியவாறு சரிந்த சுப்பண்ணா அந்த இடத்திலேயே பிணமானார்.
அவருடைய சத்தத்தைக் கோழிப்பண்ணையில் இருந்த தங்கவேலுவும் குப்பாத்தாளும் ஓடி வந்து பார்த்தனர்.அங்கு ரத்த வெள்ளத்தில் சுப்பண்ணா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைக் கண்ட அந்தக் கொலையாளிகள் இவர்களையும் விடவில்லை. வீட்டுக்குள்ளேயே அவர்களை ஓட ஓடத்துரத்திய கொலையாளிகள் தங்கவேலுவையும் குப்பாத்தாளையும் அதே போலவே கழுத்தை அறுத்துக் கொன்றுபோட்டு ஓடி விட்டனர்.
இத்தனை நடந்த போதிலும் இது குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை. இன்று காலையில் பால்காரர் வந்துபார்த்த போது தான் இந்தக் கொலை விவரம் வெளியே தெரிய வந்தது.
சுப்பண்ணா, தங்கவேலு மற்றும் குப்பாத்தாள் ஆகியோரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தன. அங்கு பல கோழிகளும் மிதிபட்ட நிலையில் செத்துக் கிடந்தன.
தகவலறிந்தவுடன் போலீசார் விரைந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். கழுத்தை அறுத்து மிகவும்கொடூரமாகக் கொலை செய்தவர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கானகாரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் வீட்டிற்குத் திருடர்கள் வந்தால் எத்தனை கோழிகளை வேண்டுமானாலும் அவர்களுக்குக் கொடுக்கும்அளவு கடந்த இரக்க சிந்தனை கொண்டவர்கள் என்று தங்கவேலு குடும்பத்தைப் பாராட்டும் அக்கம்பக்கத்தில்உள்ளவர்கள் அவர்களுக்கா இந்தக் கதி என்று வேதனையுடன் கூறினர்.
கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமாக இந்த மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications