மதுரை கல்லூரிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
மதுரையில் உள்ள முக்கியக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அமெரிக்கன் கல்லூரி, மதுரை கல்லூரி, சில பள்ளிகள், முக்கியப் பாலங்கள், ரயில்வே பாதைகளில் வெடிகுண்டுகள்ஏராளமான அளவில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவை வெடிக்கும் என்றும் மதுரை கல்லூரிக்கு வந்தகடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் மோப்ப நாய்கள்,வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து கல்லூரியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல, அமெரிக்கன் கல்லூரி மற்றும் கடிதத்தில்குறிப்பிட்டிருந்த இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எங்குமே குண்டுகள் கிடைக்கவில்லை.
இது வெறும் புரளியாக இருந்தாலும் கூட, சுதந்திர தினம் நெருங்குவதால் போலீஸார் உஷார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications