குஜராத்தில் மீண்டும் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த ஆண்டு மிகப் பெரிய பூகம்பம் நடந்த புஜ் பகுதியில் இன்று மீண்டும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2.31 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.4 என்ற அளவுக்கு இதன் பாதிப்பு இருந்தது.
நடுக்கம் மிக லேசானதாவே இருந்ததாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம்குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதுகுறிப்பிடத்தத்தது.












Click it and Unblock the Notifications