கட்சி தாவ மாட்டோம்: இன்னொரு பாமக எம்.பியும் பல்டி
சென்னை:
பா.ம.கவிலிருந்து விலகி அதிமுகவில் சேரப் போவதில்லை என்று வந்தவாசி தொகுதி எம்.பி. துரை கூறியுள்ளார்.நேற்றே இன்னொரு பா.ம.க. எம்.பியான பு.த. இளங்கோவனும் அதிமுகவில் சேரப் போவதில்லை என்றுமறுத்தார்.
கட்சியைவிட்டு விலக மாட்டேன் என்று கூறினாலும் ராமதாசுக்கு டோஸ் விட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்துரை.
பாமக எம்.பிக்களான துரையும், பு.தா.இளங்கோவனும் அதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.இதை பு.தா. இளங்கோவன் உடனே மறுத்தார். துரையும் இப்போது மறுத்துள்ளார்.
இது குறித்து துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பத்தில் இருந்தே நான் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவருகிறேன். இருப்பினும் கட்சியின் மூத்தவர்கள் இப்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்துதலைவர் ராமதாஸிடம் பலமுறை புகார் சொல்லியும் பயன் இல்லை.
எனது சுய கெளரவத்துக்கும், மரியாதைக்கும் கட்சியில் பங்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் வளர்த்த கட்சிஇது. எனவே இதை விட்டு நான் விலக வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில்தான் தொடர்ந்து நீடிக்கிறேன்.அதிமுகவில் சேரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார் துரை.
இரண்டு எம்.பிக்களையும் பா.ம.க. இரண்டாம் மட்டத் தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். திரைமறைவில்இந்த சமரச பேச்சுக்கள் நடந்து வருகின்றன.