For Daily Alerts
Just In
பொடாவில் கைதாகிறார் தமிழர் விடுதலை இயக்க தலைவர் இளவரசன்
அரியலூர்:
தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப. இளவரசன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்றுபெரம்பலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அரியலூரில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழர் விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்சிப் படை ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.இரு அமைப்புகளும் இப்போது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக செயல்படுவதாகஅறிவித்துள்ளன.
இருப்பினும், இரு அமைப்புகளும் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அமைப்பைச் சேர்ந்த 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அமைப்பின் தலைவர் சுப. இளவரசன்விரைவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்.
அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]