வைகோ, நெடுமாறன் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள்: பொடா நீதிமன்றத்தில் தாக்கல்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திகைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
க்யூ பிராஞ்ச் போலீசார் இவற்றை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
மதிமுகவினர் 8 பேர் வீடுகளில் கிடைத்த ஆவணங்களும் இன்று நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
வைகோவின் சென்னை வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட 2 புத்தகங்கள், ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்மாநாட்டில் வைகோ பேசிய பேச்சு அடங்கிய சி.டி, கலிங்கப்பட்டி வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கேசட், கட்சி அவலகமான தாயகத்தில்எடுக்கப்பட்ட போஸ்டர்கள், வருமான வரி சான்றிதழ்கள் ஆகியவை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதே போல பழ.நெடுமாறனின் சென்னை வீட்டிலும் மதுரை அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர்எடுத்துக் கொண்ட போட்டோக்கள், அவர் எழுதிய புத்தகங்கள், போஸ்டர்கள் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டன.
மதிமுக பிரமுகர்கள் கிடைத்த வீடுகளில் பிரபாகரனின் படம், சில விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றையும் நீதிமன்றத்தில் க்யூ பிராஞ்ச்போலீசார் இன்று சமர்பித்தனர்.












Click it and Unblock the Notifications