கர்நாடகத்தில் கடும் மழை: மேட்டூருக்குப் பாய்கிறது காவிரி நீர்
மேட்டூர்:
கர்நாடகத்தில் இருந்து காவிரில் கரை புரண்டு வரும் வெள்ள நீரால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் இரண்டு அடிஅதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. கபினி அணைக்கட்டுஉள்ளிட்ட பல்வேற கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் அணைகளை காப்பாற்ற உபரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகம் உள்ளது. இதையடுத்து நேற்றுமுதல் நீரை கர்நாடகம் திறந்துவிட்டது.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீர் இன்று மேட்டூர் வந்து சேர்ந்தது. இதனால் மேட்டூர் அணையின் மட்டம் ஒரே நாளில் 2 அடிஉயர்ந்துவிட்டது.
நேற்று டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடப்பட்டது. ஆனால், அதை கர்நாடகம் உடனடியாக ஏற்கவில்லை.
ஆனால், மழை காரணமாக கூடுதல் நீர் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குள் பாய ஆரம்பித்துவிட்டது. நேற்று 43.92 அடியாக இருந்தமேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 46 அடியாக உயர்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
கர்நாடகம் உரிய நேரத்தில் நீர் தர மறுத்ததால் தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளார்கள்என்பது நினைவுகூறத்தக்கது.