ஓசூரில் சிக்கினான் கவுஸ் பாட்சா
ஓசூர்:
சென்னையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடிய பிரபல திருடன் கவுஸ் பாட்சா, ஓசூரில்கொள்ளையடித்தபோது பொதுமக்களிடம் பிடிபட்டான்.
சென்னையில் பல காலமாக திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தவன் கவுஸ் பாட்சா. திறமையுடன் திருடுவதில்வல்லவனான பாட்சாவுக்கு போலீஸ் துறையிலேயே பலர் நண்பர்களாக இருந்தனர். இதனால் தனது திருட்டுத்தொழிலை பாட்சா ஜாலியாக செய்து வந்தான்.
பாட்சாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் அவநைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். ஆனால்பாட்சா சிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கீழப்பாக்கம் பகுதியில் நடந்த திருட்டுக்கள் தொடர்பாகபாஷாவை போலீஸார் தேடினர். போலீஸாரின் தீவிர வேட்டையில் மேற்கு முகப்பேர் போலீஸாரிடம் பாட்சாசிக்கினான்.
கைது செய்யப்பட்ட பாட்சா தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து நைசாக தப்பி விட்டான் பாட்சா.
இதையடுத்து சமீபத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார், கவுஸ்பாட்சா உடனடியாகச் சரணடைய வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விட்டார். அவ்வாறு சரணடையாவிட்டால் எங்கள் ட்ரீட்மெண்ட் படி அவனைப் பிடிப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது கணவரை போலீஸார் தான் சுட்டுக் கொன்று விட்டதாக கவுஸ் பாட்சாவின் மனைவி கீதா புகார்கூறினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆள் கொணர்வு) மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே போலீஸார் பாட்சாவைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஓசூர் பகுதியில் ஒரு இடத்தில் பாட்சா திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அவன்பொதுமக்களிடம் பிடிபட்டான்.
அவனைக் கைது செய்தபோது தான் அவன் கவுஸ் பாட்சா என்பது ஓசூர் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பாட்சா குறித்து சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஓசூர் வந்த சென்னைபோலீசார் அவனை மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-->