ஜாலியன் வாலாபாக் படுகொலையும் கஞ்சி தொட்டியும்: இளங்கோவன் வர்ணனை
சென்னை:
சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை போலவே மதுரையில்நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்க முயன்ற திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இது குறித்து மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் திமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போலீசார் தான் முழுக்க முழுக்க காரணம்.
போலீசார் மூலம் தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கெல்லாம் தமிழக அரசுபதிலளித்தே ஆக வேண்டும்.
மதுரை போலீஸ் கமிஷனர் சூர்யபிரகாசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிராக திமுகவினர் யாராவது, ஏதாவது கூறியிருந்தால் அதிமுகவினர் தான் அதற்குப் பதில் கொடுத்திருக்கவேண்டும். அதற்குப் பதிலாக போலீசார் ஏன் திமுகவினரைத் தாக்க வேண்டும்?
மதுரை செல்லூரில் உள்ள அவ்வளவு குறுகலான இடத்தில் திமுகவினர் மீது போலீசார் வன்முறையில்இறங்கியுள்ளது சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தான் நினைவுபடுத்துகிறது.
அராஜகத்தைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவுக்காகத் தயாராகி வந்த மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தை ஒதுக்கதமிழக அரசு கடைசி நேரத்தில் மறுத்து விட்டதாகவும் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
இணைப்பு விழா குறித்து அவர் மேலும் கூறுகையில், விரைவில் தமிழகத்தில் அமையவுள்ள காமராஜர் ஆட்சியின்முதற்கட்ட நடவடிக்கை தான் இந்த இணைப்பு விழா ஆகும். இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி பேசும் பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications