For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊட்டியில் கன மழை: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழைபெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது.

குறிப்பாக ஊட்டியில் கன மழை பெய்வதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த மழை காரணமாக தோட்டப் பயிர் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உருளை போன்ற பயிர்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து:

இதற்கிடையே மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை வலுத்துள்ளதால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது.இதைத் தொடர்ந்து உபரி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு அனுப்பி வருகிறது.

இதனால் மேட்டூருக்கு தொடர்ந்து காவிரியில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம்தற்போது 46.6 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,180 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X