தமாகாவிலிருந்து குமாரதாஸ் சஸ்பெண்ட்: 2 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
சென்னை:
அதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளர். மேலும் 2அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தங்களை தமாகா எம்.எல்.ஏக்களாகவே அங்கீகக்குமாறும், தாங்கள் தனித்தே செயல்படப்போவதாகவும் அவர்கள் சபாநாயகர் காளிமுத்துவிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கடிதம் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி நேற்றுவிவாதித்தது. தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இது குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் குமாரதாஸ் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும்ஈஸ்வரன் மற்றும் ஹக்கீம் ஆகிய இரு எம்.எல்.ஏக்களுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற இரு எம்.எல்.ஏவான மணி நாடாரை சமாதானப்படுத்தும் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடிஆதித்தனிடம் விடப்பட்டுள்ளது.
மற்றொரு எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசன் உண்மையில் தமாகாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் இந்திய குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அவர்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமாகா தலைவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மேலும் சில தமாகா எம்.எல்.ஏக்கள் எங்களது அணியில் விரைவில் சேரவுள்ளனர் என்று ஈஸ்வரன்கூறினார்.
நம்பவே முடியவில்லை - வாசன்:
இதற்கிடையே கூட்டத்திற்குப் பின்னர் வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடிதம் கொடுத்துள்ள ஐந்து எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் ஏதோ நிர்ப்பந்தத்தின் பேரிலேயே கடிதம்கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. கட்சி இணைப்பு என்பது மூப்பனாரின் முடிவு. அதையொட்டியே நானும், அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பு குறித்து முடிவு செய்தோம்.
இணைப்பு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தபோது, அதை நேரில் வந்து ஆதரித்தார் ஹக்கீம்.மதுரையில் மாநாட்டு இடம் தேடியபோதும் கூடவே இருந்து பார்த்துக் கொடுத்தார்.
பொதுக் குழு முடிவுகளை ஆதரிப்பதாக மணி நாடார் கூறியிருந்தார். அதேபோல, ஈஸ்வரனும் இணைப்பு விழாதொடர்பாக நடந்த கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். எனவே இந்த ஐந்து பேரும் அதிருப்தியாகஉள்ளார்கள் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.
இந்த விவகாரத்தால் தமாகா-காங்கிரஸ் இணைப்பு விழா பாதிக்கப்படாது. இவர்களைத் தவிர வேறுஎம்.எல்.ஏக்களும் கட்சியை விட்டு விலகுவார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
இந்தத் தடங்கல்களை எல்லாம் மீறி மதுரையில் லட்சோப லட்சம் தொண்டர்கள் பங்கேற்க இணைப்பு விழாவெற்றிகரமாக வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications