துணை ஜனாதிபதி தேர்தல்: வைகோ குறித்த தீர்ப்பில் சிறு திருத்தம்
சென்னை:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க டெல்லி செல்வது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிறிய மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை (திங்கள்கிழமை) காலை வேலூர் சிறையிலிருந்து வைகோ நேரடியாக சென்னை கொண்டு வரப்பட்டுஅங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட வேண்டும். வாக்களித்த பின்னர் அன்று மாலையேஅங்கிருந்து அவரை சென்னைக்குக் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்னதாகஉத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று இரவே வேலூர் சிறையிலிருந்து வைகோ சென்னை கொண்டு வரப்பட வேண்டும். இரவில் சென்னை மத்தியசிறையில் அவர் வைக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு திங்கள்கிழமை காலை டெல்லி விமானத்தில் வைகோ டெல்லி கொண்டு செல்லப்பட வேண்டும். மற்றநிபந்தனைகளில் மாற்றம் இல்லை என்று திருத்தப்பட்ட உத்தரவில் தெவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே சென்னைக்கு வைகோவை கொண்டுவருவதற்காகவே நீதிபதி தன் உத்தரவில் திருத்தம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications