வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் உண்ணாவிரதம்: தாயாரும் போராட்டம்
சங்கரன்கோவில்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் நடந்து வரும்உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது தாயாரும் கலந்து கொண்டுள்ளார்.
வைகோ கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று தமிழகம் முழுவதும் மதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலிமாவட்டத்தில் ஏழு இடங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
திருநெல்வேலி, சங்கரன்கோவில், நான்குநேரி, தென்காசி, ஆலங்குளம், சிவகிரி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியஇடங்களில் இப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் சங்கரன்கோவிலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வைகோவின் தாயாரான மாரியம்மாள் தான்தலைமை வகித்தார்.
சென்னை, மதுரை, கோவையில்...
இதற்கிடையே சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்பட பல இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டார அலுவலகங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு முன் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
0மதுரை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை, திருப்பூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும்அவினாசி ஆகிய இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
துண்டுப் பிரசுரங்கள் வினியோகம்:
போராட்டத்தின் ஒரு பகுதியாக மதிமுகவினர் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
"இந்திய மண்ணில் விடுதலைப்புலிகள் வன்முறையில் ஈடுபடுவதை மதிமுக என்றும் ஆதரித்ததில்லை. ஆனால்இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடி வரும் புலிகளை எப்போதும் ஆதரிக்கும்" என்று அந்தத் துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.