மேலும் 63 கோவில்களில் அன்னதானத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய கோவில் அன்னதானத் திட்டம் மேலும் 63 கோவில்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜெயலலிதா சுதந்திர தின உரையின் போது வெளியிட்டார்.
55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை வளாகத்தில் தேசியக் கொடியேற்றிவைத்து ஜெயலலிதா பேசுகையில்,
மார்ச் 23ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. இப்போது மேலும் 63 கோவில்களில் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதையடுத்து மொத்தம் 126கோவில்களில் தற்போது அன்னதானம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக பக்தர்களும், பொதுமக்களும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும். அதிகாரிகளிடம்நேரடியாக தருவதோடு, கோவில்களில் இதற்காக வைக்கப்பட்டுள்ள உண்டியல்களிலும் தங்களது அன்பளிப்பைசெலுத்தலாம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications