பாண்டிச்சேரியிலும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்ய அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களைப் பாண்டிச்சேரியிலும் தடை செய்ய வேண்டும்என்று அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பாண்டிச்சேரியில் இன்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில அதிமுக செயலாளர்நடராஜன் கூறுகையில்,
தமிழகத்தில் சில தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்வியக்கத்தைச்சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரியில் நுழைந்து சட்டம்-ஒழுங்கைப் பாதிக்க நேரிடலாம்.
எனவே அந்த இயக்கங்களுக்குப் பாண்டிச்சேரியிலும் தடை விதிக்க வேண்டும் என்றார் நடராஜன்.
""பாண்டிச்சேரி 40"":
இதற்கிடையே பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுபட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிஅங்கு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1962ம் ஆண்டில் தான் பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுபட்டு இந்தியாவுடன் இணைந்தது.
இதையொட்டி பாண்டிச்சேரியில் பல்வேறு வகையான விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இன்று பாண்டிச்சேரியில் அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications