மதுரையில் ஸ்டாலின்-அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர கோஷ்டி மோதல்: 30 பேர் கைது
மதுரை:
மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல்ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 30 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் கடந்த மாதம் கஞ்சித் தொட்டி திறப்பு விழாவின்போது திமுகவினர் மீது போலீஸார் பயங்கரத் தாக்குதல்நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்,மதுரை மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினரையும் அவர்கள் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதிலும் திமுக சார்பில் பேரணியும் ஆர்ப்பாட்டமும்நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக விவாதிக்க மதுரை திமுகவினர் நேற்று (வியாழக்கிழமை) கூடினர். இவர்கள் ஸ்டாலின்ஆதரவாளர்கள். இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அப்போது இந்தக் கூட்டத்தை நிறுத்துமாறு திமுக மேலிடம் தந்தி அனுப்பியது. இதைத் தொடர்ந்து கூட்டம்ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை ஊரக மாவட்ட திமுக செயலாளர் அக்னிராஜுவை சந்திக்க ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவர்இருந்த ஹோட்டலுக்குக் கிளம்பினர். இதை அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றி கைகலப்பாகமாறியது. ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
கற்களை எறிந்தும் அவர்கள் தாக்கிக் கொண்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடைகள்அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. அங்கே நின்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள்அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதையடுத்தே அப்பகுதியில்ஓரளவு பதற்றம் தணிந்தது.
மோதல் தொடர்பாக 30 திமுகவினரைப் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும்சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
நீண்ட நாட்களாகவே மதுரையில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களும் அழகிரி ஆதரவாளர்களும்ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையேகோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பேரணி நிறுத்தி வைப்பு:
மதுரையில் திமுகவினர் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி அங்கு நடக்கவிருந்த கண்டனப்பேரணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,மதுரையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்குத் தற்காலிகத் தடையும் விதித்துள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications