20 நிமிடம் படாத பாடு படுத்திய ஜெ. ஏற்றிய தேசியக் கொடி
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்த தேசியக் கொடி சுமார் 20நிமிடங்கள் சரியாகப் பறக்காமல் கம்பத்திலேயே சிக்கிக் கொண்டது.
சென்னை கோட்டையில் உள்ள 200 அடி உயரக் கம்பத்தில் ஜெயலலிதா நேற்று காலை 8.25 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார்.
உயர ஏறிய கொடி, உச்சிக்குச் சென்றதும், கீழ்ப்பகுதி கம்பத்தின் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதை சரி செய்யராணுவ வீரர்கள் முயன்றும் முடியவில்லை.
இதைத் தொடர்ந்து முதல்வர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போதும் ராணுவ வீரர்கள் கொடியைசரியாகப் பறக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.
முதல்வர் தனது உரையை 8.50 மணியளவில் முடித்தார். பின்னர் கீழே இறங்குவதற்காக படிகளில் வந்தார்.அப்போது தான் தேசியக் கொடி சரியாகப் பறக்கத் தொடங்கியது.
இதையடுத்தே பட்டொளி வீசி பறக்கத் தொடங்கிய கொடியைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களில்சந்தோஷம் காணப்பட்டது.