சென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும்கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்து பாடி பகுதியில் உள்ள முத்துராமலிங்க நகரில் சிவசக்தி கருமாரி அம்மன் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் விரைவில் திருப்பணிகள் நடக்கவுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக் கோவிலின் கதவை உடைத்துக் கொண்டு சில கொள்ளையர்கள்நுழைந்தனர்.பின்னர் அங்குள்ள உண்டியலையும் கடப்பாரைக் கம்பியால் உடைத்து பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்ததங்க-வெள்ளி நகைகள் மற்றும் பணம், சில்லரைகளை கொள்ளையர்கள் திருடிக் கொண்டு சென்றனர்.
திருடப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாகவும்,ரூ.1 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு நடக்கவுள்ள திருப்பணிகள் பாதிக்கப்படலாம்என்றும் கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications