பெண் நிருபர் கொலை வழக்கு: மகாஜன் மீது சராமாரி புகார்
டெல்லி:
"இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிக்கை நிருபரான ஷிவானி பட்நாகர் கொலை செய்யப்பட்டதில் நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனுக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியானஐ.பி.எஸ். அதிகாரி ரவிகாந்த் ஷர்மாவின் மனைவி மது ஷர்மா சராமாரியாகப் புகார் கூறினார்.
கடந்த 1999ம் ஆண்டு ஷிவானி கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ரவிகாந்த் ஷர்மாவைப்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு மகாஜன் மீது சராமாரியாக தொலைக்காட்சி நிருபர்களிடம் புகார் கூறினார் மது ஷர்மா.
மகாஜனுக்கு ஷிவானி கொலையில் தொடர்பு உள்ளதாகவும் இதை துணைப் பிரதமர் அத்வானி தொடர்ந்துமறைத்து வருவதாகவும் ஆவேசத்துடன் கூறிய மது ஷர்மா என்னிடம் எதையும் கேட்காதீர்கள். ஷிவானியை ஏன்கொலை செய்தீர்கள் என்று மகாஜனிடம் போய்க் கேளுங்கள் என்றும் கோபத்துடன் கூறினார்.
ஆனால் அவருடைய புகார்களை மகாஜன் கடுமையாக மறுத்துள்ளார். இந்தக் குற்றச் சாட்டுகளில் எந்தவிதமானஉண்மையும் இல்லை. இது தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க நான் தயார் என்றும் மகாஜன்கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தையும் காங்கிரஸ் கட்சி கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகாஜன் மீது கொலைப் புகாரும்சுமத்தப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்வற்புறுத்த ஆரம்பித்துள்ளது.
ஆனால் மகாஜன் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ராஜினாமா செய்யவும் மாட்டார் என்று பாஜகதெளிவாகக் கூறிவிட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானியும் இதையே கூறினார்.
மேலும் தன் மீது பொய்ப் புகார் கூறிய மது ஷர்மாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும்கூறப்படுகிறது. அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று மகாஜனுக்கு பாஜக அறிவுரை கூறியுள்ளதாகஅக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்ட அமைச்சருமான அருண் ஜேட்லி கூறினார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications