பாண்டிச்சேரி கோவில் திருவிழாவில் மோதல்: பக்தர் குத்திக் கொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் மோதலில் ஒரு பக்தர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாண்டிச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் என்ற கோவில் உள்ளது. சுமார் 450 வயதானஇந்தக் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கே.ஆர். மல்கானி மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர்கலந்து கொண்டு தேர் இழுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பிச் சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இரு தரப்பினருக்கிடையே திடீரென்றுமோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் சின்னத்துரை மற்றும்இளங்கோவன் ஆகியோருக்குக் கத்திக் குத்து விழுந்தது.
இவர்களில் சின்னத்துரை மட்டும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகிச் சரிந்தார். இளங்கோவன்கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.